Saturday, June 25, 2011




தீப்பெட்டி

தொடக்கங்களின் குறியீடென‌
தன்னை முன்னிறுத்தி கொண்டது வெளிச்சம்.
எனினும் ஆயிரக்கணக்கான‌ தீக்குச்சிகள்
மடிந்தபின்னரே சுடர்விட தொடங்கியது அதனிருப்பு.
எரிந்து கறுப்புத்துகள்கள் உதிர்க்கும்
தீக்குச்சிகளின் சடலங்களுடன்
துர்நாற்றம் வீசத்தொடங்கியது
தீப்பெட்டிகளுக்குள் தங்கள் புதைத்துக்கொண்ட‌
கந்தக சிறார்களின் வண்ணக் கனவுகள்.

ச.கோபிநாத்
சேலம்
9790231240