Sunday, May 22, 2011





அன்பின் பாடம்

யாருமில்லா வகுப்பறையில்
ஆசிரியர்களாகும் குழந்தைகளிடம்
அன்பின் பாடம் கற்கின்றன..
வகுப்பறை சுவர்களும்,
நாற்காலிகளும், மேசைகளும்!!


-கோபிநாத்,சேலம்.
9790231240


நன்றி
நந்தலாலா வலைப்பூ இதழ்

Thursday, May 12, 2011


மழைக்கு பிந்தைய
மாலை பொழுதில்
நீர் சொட்டும் இலைகளை சுமக்கும்
மரங்களின் அடியில் நின்றவாறு
விளையாட்டாய் கிளைகளை ஆட்டும்
குழந்தைகளின் மனதை
குதூகலப்படுத்தவே முத்தமழை பொழிகின்றன‌
பச்சையம் படர்ந்த‌ இலைகள்.

ச.கோபிநாத்