Saturday, March 5, 2011
Wednesday, March 2, 2011
பேதைமை
அடர்வனமொன்றில்
இலைகளிடையே நுழைந்துத் தரைதொடும்
சூரியக் கதிர்களின் துணைக் கொண்டு தேடி அலைகிறேன்.
புலப்படாத புதருக்குள் சென்று மறைந்தவாறே
முகம்காட்டி என்னை அழைக்கிறது
நடையைத் துரிதப்படுத்த
ஓடியவாறே இருக்கிறது
பருத்தியென மேனிக்கொண்ட முயல்
கைகளுக்கு எட்டும் தூரத்திலிடிருந்தும்
அதன் போக்கில் விட்டு விளையாடித் தொடர்கிறேன்
ஏதுமறியா குழந்தையென.
ச.கோபிநாத்
நன்றி : வடக்கு வாசல் இதழ் மற்றும் இணையதளம்
Subscribe to:
Posts (Atom)